வன்னியர் சமுதாயத்துக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்து

மதுரை: வன்­னி­யர் சமு­தா­யத்­திற்கு வழங்­கப்­பட்­டி­ருந்த 10.5% உள் இட­ஒ­துக்­கீட்டு அர­சா­ணையை ரத்து செய்­வ­தாக சென்னை உயர் நீதி­மன்­றத்­தின் மதுரைக் கிளை உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

"சாதி­வா­ரி­யாக முறைப்­படி கணக்­கெ­டுப்பு நடத்­தா­மல் இட ஒதுக்­கீடு வழங்­கி­யது தவ­றா­னது," என்­றும் நீதி­ப­தி­கள் கருத்து தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், நீதி­ப­தி­க­ளின் தீர்ப்பை எதிர்த்து தமி­ழக அரசு மேல்­மு­றை­யீடு செய்ய உள்­ள­தாக மாலை மலர் ஊட­கத் தக­வல் குறிப்­பிட்­டுள்­ளது.

நீதி­ப­தி­க­ளின் ரத்து உத்­த­ரவு குறித்து முதல்­வர் மு.க. ஸ்டா­லின், உயர்க்­கல்­வித்­துறை அமைச்­சர் பொன்­முடி மற்­றும் அதி­கா­ரி­க­ளு­டன் அவ­சர ஆலோ­சனை நடத்­தி­னார். அப்­போது, வன்­னி­யர்­க­ளுக்­கான இட­ஒ­துக்­கீடு ரத்து தீர்ப்பை எதிர்த்து அரசு சார்­பில் உச்ச நீதி­மன்­றத்­தில் மேல்­மு­றை­யீடு செய்ய முடிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

வன்­னி­யர்­க­ளுக்கு இவ்­வாண்டு முதல் கல்வி, வேலை­வாய்ப்­பில் 10.5% இட­ஒ­துக்­கீடு வழங்­கு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்த அர­சாணை ரத்து செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் நீதி­மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

அத்­து­டன், இந்த தீர்ப்பை நிறுத்தி வைக்­க­வேண்­டும் என பாமக தரப்­பில் விடுக்­கப்­பட்ட கோரிக்ை­க­யும் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

வன்­னி­யர்­க­ளுக்கு 10.5% இட ஒதுக்­கீடு வழங்­கும் அர­சா­ணையை எதிர்த்து உயர் நீதி­மன்ற மது­ரைக்­கி­ளை­யில் நடந்து வந்த வழக்கு தொடர்­பில் நேற்று தீர்ப்பு கூறப்­பட்­ட­போது, 10.5% உள் இட ஒதுக்­கீட்­டுக்­கான அர­சாணை ரத்து செய்­யப்­பட்­டது.

வழக்கு விசா­ர­ணை­யின்­போது பேசிய நீதி­ப­தி­கள், வன்­னி­யர்­க­ளுக்கு 10.5% இட ஒதுக்­கீடு வழங்­கும் அர­சாணை சட்­டத்­திற்கு முர­ணா­னது. சாதி­வா­ரி­யான கணக்­கெ­டுப்பை முறை­யாக நடத்­திய பின்­னரே இட­ஒ­துக்­கீட்டை வழங்­க­வேண்­டும், அவ்­வாறு முறை­யாக கணக்­கெ­டுக்­கா­மல் எப்­படி இட­ஒதுக்­கீட்டை வழங்­க­மு­டி­யும்? என்று கேள்வி எழுப்­பி­னர்.

நாங்­கள் கேட்ட ஆறு கேள்­வி­க­ளுக்கு அரசு அளித்த விளக்­கம் போது­மா­ன­தாக இல்லை. எனவே, இட­ஒ­துக்­கீடு செல்­லாது என நீதி­பதி­கள் தீர்ப்­ப­ளித்­துள்­ள­னர்.

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணை சட்டத்திற்கு முரணானது. முறையான கணக்கெடுப்பு நடத்தாமல் இடஒதுக்கீடு வழங்கியது மிகவும் தவறான அணுகுமுறை.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதிகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!