கனமழை; பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு

16,000 ஏக்கருக்கு மேல் மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கி அழுகும் அபாயம்.

சென்னை: தமி­ழ­கத்­தில் பர­வ­லாக கன­மழை பெய்து வரு­வ­தால் சென்னை உட்­பட பல மாவட்­டங்­களில் நேற்று பள்­ளி­க­ளுக்கு விடு­முறை அறி­விக்­கப்­பட்­டது.

இலங்கை கட­லோ­ரப்­ப­குதி மற்றும் அத­னை­யொட்­டிய தென் தமி­ழக கட­லோரப் பகு­தி­யில் குறைந்த காற்­ற­ழுத்த தாழ்வுப் பகுதி நீடித்து வரு­கிறது. இதன் கார­ண­மா­க தமி­ழ­கத்­தின் பல்­வேறு மாவட்­டங்­களில் தீபா­வளி வரை பலத்த மழை பெய்­யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னு­ரைத்­துள்ளது.

இதை­ய­டுத்து, டெல்டா மாவட்­டங்­களில் தொடர்ந்து கன­மழை பெய்­யும் என அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதற்­கி­டையே தொடர்ந்து கன­மழை பெய்து வரு­வ­தால் காஞ்­சி­பு­ரம், சென்னை, திரு­வள்­ளூர், செங்­கல்­பட்டு, நாகை, திருச்சி, கள்­ளக்­கு­றிச்சி, திரு­வா­ரூர், கரூர், திருப்­பத்­தூர், வேலூர், தஞ்சை, பெரம்­ப­லூர், அரி­ய­லூர், விழுப்­பு­ரம் மாவட்­டங்­களில் உள்ள பள்­ளி ­களுக்கு விடு­முறை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஏற்­கெ­னவே கட­லூர், புதுக்­கோட்டை, நாமக்­கல், மயி­லா­டு­துறை மாவட்ட பள்­ளி­க­ளுக்கு விடு­முறை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இடை­வி­டாது கன­மழை பெய்து வரு­வ­தால் ராணிப்­பேட்டை மாவட்­டத்­தில் மட்­டும் பள்ளி, கல்­லூ­ரி ­க­ளுக்கு விடு­முறை அறி­வித்து அம்­மா­வட்ட ஆட்­சி­யர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

சென்­னை­யில் நேற்று முன்­ தினம் இரவு முதல் கன­மழை பெய்து வரு­கிறது. இதன் கார­ண­மாக சென்­னை­யில் உள்ள பள்­ளி­ க­ளுக்கு நேற்று விடு­முறை அறி­வித்து மாவட்ட ஆட்­சி­யர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

இதற்­கி­டையே தஞ்சை, நாகை உள்­ளிட்ட டெல்டா மாவட்­டங்­களில் இடி­யு­டன் கூடிய கன­மழை பெய்து வரு­கிறது.

தஞ்சை மாவட்­டத்­தில் கடந்த மூன்று நாட்­க­ளாக பெய்து வரும் கன­ம­ழை­யால் சுமார் 10,000 ஏக்­க­ரில் சம்பா இளம் நாற்­று­கள் முற்றி­லும் மூழ்கி உள்­ளது. மேலும் மழை இடை­வி­டாது பெய்து வரு­வ­தால் வயல்­வெ­ளி­கள் முழு­வ­தும் வெள்­ளக்­கா­டாகக் காட்சி அளிக்­கின்­றன. பல இடங்­களில் தாழ்­வான பகுதிகளில் மழை­நீர் தேங்கி உள்­ள­தால் அறு­வ­டைக்கு தயா­ரான குறுவை பயிர்­கள் சாய்ந்து கிடக்­கின்­றன.

இதே­போல் திரு­வா­ரூர் மாவட்­டத்­தி­லும் தொடர் மழை­யால் 10,000 ஏக்­க­ரில் மழை­நீர் சூழ்ந்து நெற்­ ப­யிர்­கள் மூழ்கி அழு­கும் அபா­யத்­தில் உள்­ளது. பிர­சித்தி பெற்ற பிற­வி­ ம­ருந்­தீஸ்­வ­ரர் கோவி­லுக்­குள் தண்­ணீர் புகுந்­த­தால் அதனை வடி­ய­வைக்­கும் பணி­யில் கோவில் நிர்­வா­கத்­தி­னர் ஈடு­பட்­டுள்­ள­னர். மேலும் திரு­வா­ரூர் மாவட்­டத்­தில் இரண்டு ஓட்டு வீடு­கள் இடிந்து விழுந்­தன.

நாகை மாவட்டத்தில் அறுவடைக்குத் தயாரான குறுவை நெற்பயிர்கள் மற்றும் சம்பா-தாளடி இளம் நாற்றுகள் உள்பட சுமார் 6,000 ஏக்கரில் மூழ்கி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 300 ஏக்கரில் நெற்பயிர்கள் மூழ்கி அழுகும் அபாயத்தில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரி வித்தனர்.

இந்த மழை இன்னும் நான்கு நாட்களுக்குத் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் தற்போது டெல்டா மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் செய்வது அறியாது கவலை அடைந்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!