தீபாவளிக்கு சொந்த ஊர் திரும்பும் மக்கள்

சென்னை: தீபா­வளி பண்­டி­கையை முன்­னிட்டு பொது­மக்­கள் தங்­க­ளது சொந்த ஊர்­க­ளுக்குச் செல்ல தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வரு­கிறது. கடந்த ஆண்டு தீபா­வளியின்­போது தொற்றுப் பயம் கார­ண­மாக குறைந்த அள­வி­லேயே பொது­மக்­கள் பேருந்­து­களில் பய­ணம் செய்­த­னர்.

இந்த நிலை­யில் அரசு போக்கு வரத்துக் கழ­கங்­களில் மொத்­தம் உள்ள 20,334 பேருந்­து­கள் பொது­மக்­க­ளின் பயன்­பாட்­டுக்­காக இயக்­கப்­பட்டு வரு­கின்­றன. கூட்­டத்தைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் கோயம்­பேடு பேருந்து ­நி­லை­யம், மாத­வ­ரம் புதிய பேருந்து நிலை­யம், கே.கே.நகர் பேருந்து நிலை­யம், தாம்­ப­ரம் ரயில் நிலை­யம் மற்­றும் தாம் ­ப­ரம் 'மெப்ஸ்' பேருந்து நிலை­யம், பூந்­த­மல்லி பேருந்து நிலை­யம் ஆகிய இடங்­களில் இருந்து வெளி­யூர்­க­ளுக்குப் பேருந்துகள் இயக்­கப்­படு­கின்­றன. நேற்று முன்­தி­னம் இரவு 12 மணி நில­வ­ரப்­படி மொத்­தம் 5,932 பேருந்­து­களில் 2,34,918 பய­ணி­கள் சொந்த ஊர்­க­ளுக்குச் சென்­றுள்­ள­னர். இது­த­விர நேற்று அதி­காலை வரை 60 ஆயி­ரம் பய­ணி­கள் வெளி­யூர் சென்­ற­னர்.

மொத்­தம் இது­வரை 3 லட்­சம் பய­ணி­கள் சொந்த ஊர்­க­ளுக்கு சென்­றுள்­ள­னர். இன்று தீபா­வளி என்­ப­தால் சென்­னை­யில் இருந்து வெளி­யூர்­க­ளுக்குச் செல்ல 2 லட்­சத்­துக்­கும் அதிகமானோர் வரலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!