நரிக்குறவர், இருளர் மக்களின் கனவை நிறைவேற்றிய முதல்வர்

செங்­கல்­பட்டு: நரிக்­கு­ற­வர், இரு­ளர், பழங்­குடி இன மக்­க­ளுக்கு ரூ.4.5 கோடி செல­வி­லான நலத்­திட்ட உத­வி­களை வழங்கி அவர்­களது நீண்­ட­கால கனவை நிறை­வேற்றி வைத்­துள்­ளார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.

செங்­கல்­பட்டு மாவட்­டம், பூஞ்­சேரி அருகே வசிக்­கும் இவர்கள், நீண்­ட­ நாட்­க­ளாக தங்­க­ளுக்கு வீட்டு மனை பட்­டா வழங்­க­வேண்­டும் என்று போராடி வந்­த­னர்.

இந்­நி­லை­யில், நரிக்­கு­ற­வர், இரு­ளர் சமூ­கத்­தைச் சேர்ந்த 282 பேருக்­கும் 81 பழங்­கு­டி­யின குடும்­பங்­களுக்­கும் வீட்டுமனை பட்டா, ரேஷன் அட்டை, வாக்­கா­ளர் அடை­யாள அட்டை, சாதிச் சான்­றி­தழை முதல்­வர் வழங்கினார்.

இதைத்­தொ­டர்ந்து, நரிக்­கு­ற­வர் இனப் பெண்களான அஸ்­வினி, பவானி ஆகி­யோர், முதல்­வ­ருக்கு நன்றி கூறி, தங்­க­ளது வீட்­டுக்கு வர­வேண்­டும் எனக் கோரி­னர்.

இதை­ய­டுத்து, அவர்­க­ளின் வீடு­க­ளுக்­குச் சென்று குடும்­பத்­தி­ன­ரி­டம் நலம் விசா­ரித்தார் முதல்வர்.

பூஞ்­சேரியில் வசிக்­கும் நரிக்­கு­ற­வர், இரு­ளர் இன மக்­க­ளுக்குத் தேவையான குடி­நீர், மின்­சா­ரம், சாலை வச­தி­களை ஏற்­ப­டுத்தித் தரு­வ­தா­க­வும் உறுதி அளித்­தார்.

இது­கு­றித்து முதல்­வர் தனது டுவிட்டர் பக்­கத்­தில், “சமூ­கத்­தின் விளிம்­பு­நி­லை­யில் இருக்­கும் ஒரு­வ­ரை­யும் விடாது சுய­ம­ரி­யா­தையை­யும் சமூ­க­நீ­தி­யை­யும் காப்­பதே திரா­விட இயக்­கத்­தின் பணி! சகோ­தரி அஸ்­வினிக்கு மறுக்­கப்­பட்­டது உணவு அல்ல; மரி­யாதை. அதை மீட்­டுத்­தர ஆட்­சிப் பொறுப்பு என்­பது பெரு­வாய்ப்பு,” என்று கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!