சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் மற்றும் பல்கலைக்கழக பணியாளர்கள், உலகின் தலைசிறந்த 2% விஞ்ஞானிகளில் அடங்குவர்.
அமெரிக்காவின் ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள விஞ்ஞானிகள் பட்டியலில் இது தெரியவந்துள்ளது.
அப்பட்டியலில் இடம்பிடித்துள்ள 186,177 விஞ்ஞானிகளில் 2,042 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
வேதியியல், இயந்திரப் பொறியியல், தானியக்கம், சுற்றுச்சூழல் பொறியியல், புவியியல் உள்ளிட்ட துறைகளில் அந்த விஞ்ஞானிகள் பணியாற்றுகின்றனர்.
ஐஐடி மெட்ராசை சேர்ந்த பேராசிரியர் சரித் குமார் தாஸ், இயந்திரப் பொறியியல் துறையில் நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானி என்ற பெருமைக்குரியவர்.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் ஆர்.வேல்ராஜ் உட்பட பேராசிரியர்கள் மூவரும் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.