உலகின் தலைசிறந்த 2% விஞ்ஞானிகளில் 100 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் மற்றும் பல்கலைக்கழக பணியாளர்கள், உலகின் தலைசிறந்த 2% விஞ்ஞானிகளில் அடங்குவர்.

அமெரிக்காவின் ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள விஞ்ஞானிகள் பட்டியலில் இது தெரியவந்துள்ளது.

அப்பட்டியலில் இடம்பிடித்துள்ள 186,177 விஞ்ஞானிகளில் 2,042 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

வேதியியல், இயந்திரப் பொறியியல், தானியக்கம், சுற்றுச்சூழல் பொறியியல், புவியியல் உள்ளிட்ட துறைகளில் அந்த விஞ்ஞானிகள் பணியாற்றுகின்றனர்.

ஐஐடி மெட்ராசை சேர்ந்த பேராசிரியர் சரித் குமார் தாஸ், இயந்திரப் பொறியியல் துறையில் நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானி என்ற பெருமைக்குரியவர்.

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் ஆர்.வேல்ராஜ் உட்பட பேராசிரியர்கள் மூவரும் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!