தஞ்சாவூர்: அரசாங்க வேலை வாங்கித் தருவதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிப்பவர்கள் குறித்து மாநிலம் முழுவதும் போலி சார் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர்.
அப்போது, ஒரேநாளில் 58 பேர் மீது வழக்குப் பதிந்து, 30 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்த னர். இவர்களில் 12 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
கைதானவர்களில் சிலா், வங்கிகள், ரயில்வே நிலையம், சத்துணவு மையங்களில் அரசாங்க வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்துள்ளனா்.
முன்னாள் அமைச்சா் ஓ.எஸ்.மணியனின் உதவியாளரான தஞ்சாவூரைச் சோ்ந்த சேஷாத்திரி, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மூன்றாவது மனைவி ராணி எலிசபெத், 36, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் தனக்கு செல்வாக்கு இருப்பதாகக் கூறி கல்வித் துறையில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய ஹரிநாத், தலைமைச் செயலக ஊழியர் கண்ணன் ஆகியோா் கைதானவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக காவல்துறையின் சட்டம், ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, மாநிலம்ேதாறும் நடத்தப்பட்ட விசாரணையில், 30 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடமிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் ெதரிவித்துள்ளன.
இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில் தமிழக காவல்துறை, வனத்துறை, நீதிமன்றங்களில் வேலை வாங்கித் தருவதாக போலி நியமன ஆணைகளை வழங்கி ரூ.5 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில், ஓய்வுபெற்ற காவலர் உள்பட இ்ருவர் கைதாகினர்.
முக்கிய குற்றவாளியான அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் குமரேசனைப் போலிசார் தேடி வருகின்றனர்.
வேலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் காவல்துறை, வனத்துறை, நீதிமன்றத்தில் வேலை கிடைத்துள்ளதாக போலி பணி நியமன ஆணைகளை வழங்கி தலா ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை பணம் பறித்து உள்ளது தெரியவந்துள்ளது.