மழையால் தெருவோர மக்களிடம் தொற்று பரவும் அபாயம் அதிகரிப்பு

திருச்சி: தமிழ்நாட்டில் கனமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், இந்த மழை பாதிப்பால் தடுப்பூசி போடாமல் சாலையோ­ரம் வசிக்­கும் மக்­க­ளி­டையே கொவிட்-19 கிருமித் தொற்று பரவும் அபாயம் அதிகம் நிலவுவதாக 'த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

ெதருவோரம் வசிக்கும் மக்களி டம் எந்த ஓர் அடை­யா­ளச் சான்­றிதழும் இல்­லா­த­தால் தடுப்­பூசி போடு­வ­தில் சிக்கல் இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இர­வில் மழை பெய்­தால், தாங்­கள் பாதுகாப்பாகத் தங்குவதற்கு ஏதுவாக ஒரு நல்ல இடத்தை தேடி அலையும் சூழலும் உள்ளது.

அவர்­களில் பலர் தடுப்­பூசி போடா­மலும் கொவிட்-19 வழிகாட்டி நெறி­மு­றைகளைப் பின்­பற்­றா­மலும் கூட்­டம் கூட்­ட­மாக பாலத்­தின் அடி­யிலோ அல்­லது பேருந்து நிலை­யத்­திலோ அல்­லது மழை­யி­லி­ருந்து தப்பிக்கும் இடங்­க­ளிலோ முகா­மிட்­டி­ருப்­பது இத்தொற்று பரவு­வது குறித்த கவ­லையை அதிகப்படுத்தி உள்­ளது.

தென்­னூ­ரில் வசிக்­கும் பி.என்.நட­ரா­ஜன் கூறு­கை­யில், "இங்கு வசிக்­கும் குடி­யி­ருப்­பா­ளர்­கள்­கூட கொவிட் பாது­காப்பு வழி­மு­றை­களைப் பின்­பற்­று­வ­தில்லை. ஏனெ­னில், அவர்­களில் பலரும் தடுப்­பூசி போட்­டி­ருப்பதால் சர்வ சாதாரணமாக உள்ளனர்.

"தடுப்பூசி கிருமித்தொற்றில் இருந்து அவர்­க­ளைப் பாது­காக்­க­லாம். ஆனால், தடுப்­பூசி போட்டுக் கொள்ளாத சாலை­யோ­ரம் வசிக்­கும் மக்­க­ளின் நிலைமை அப்படி அல்ல. எனவே, அவர்­க­ளுக்கும் தடுப்­பூசி போடு­வதை உறுதி செய்ய அதி­கா­ரி­கள் சில வழி­மு­றை­களைப் பின்பற்றவேண்­டும்," என்­றார்.

"அடை­யாள அட்­டை­கள் இல்­லா­தது ஒரு பெரிய பிரச்­சினை அல்ல. தெருவாசி­க­ளுக்கு சில தற்­கா­லிக ஆவ­ணங்­களை வழங்­கு­வ­தன்மூலம் இந்தப் பிரச்சி னையை எங்களால் எளி­தாக சமா­ளிக்க முடி­யும்.

"இருப்பினும், தடுப்­பூசி போடு­வ­தற்கு அவர்­களைச் சம்­ம­திக்க வைப்­பதே முக்­கிய பிரச்­சினையாக உள்ளது.

"அது­மட்­டு­மின்றி, அவர்­கள் முழு­மை­யாகத் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வதை உறுதி செய்வதும் முக்கியம். பலர் ஒரே இடத்­தில் தங்­கு­வது அரி­தா­கவே இருப்­ப­தால், அவர்­களுக்கு இரண்­டா­வது தவணை தடுப்பூசியைப் போட்டு விடத் தேடுவதும் கடி­ன­மான பணி­யாக இருக்­கும்," என்று சுகா­தார அதி­காரி ஒருவர் விவரம் தெரி வித்துள்ளார்.

நிர்­வா­கம் இப்­பி­ரச்சி­னை­களை சமா­ளிக்கவேண்­டிய நிலை­யில், தெரு­வோர மக்­க­ளுக்குத் தடுப்­பூசி போடு­வதை சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­கள் புறக்­க­ணித்து வரு­வ­தாக தக­வல்­கள் கூறுகின்றன.

எவ்­வா­று இருப்பி­னும், குறைந்­த­பட்­சம் ஊசி போடத் தயா­ராக இருப்­ப­வர்­க­ளுக்கு தடுப்­பூசி போடு­வதை உறுதி ெசய்­யத் தவ­றி­யது ஏன் என்­பது தெளி­வா­க குறிப்பிடப் படவில்லை.

"நாங்­கள் நோய்த்­தொற்று ஏற்­பட்­டால் மிக­வும் போரா­டு­வோம். எனக்­கு மது, புகை­யிலைப் பொருட்­களை உட்­கொள்­ளும் பழக்­கம் உள்­ளது. அத­னால் தடுப்பூசி ஏதா­வது பிரச்­சினை கொடுத்­து­வி­டுமோ என்ற பயம் எனக்கு உள்ளது.

"இருப்­பி­னும், என்­னி­டம் ஆதார் உள்ளிட்ட ஆவ­ணங்­கள் இல்­லா­த­போது அதை எப்­ப­டிப் பெறு­வது?" என ஸ்ரீரங்­கத்­தில் தெருவோரம் வசிக்கும் பழனி, 50, வினவினார்.

மாவட்ட ஆட்­சி­யர் எஸ்.சிவ­ராசு­ இதுகுறித்து கூறியபோது, "வரும் வாரத்­தில் தெரு­வோர மக்­க­ளுக்குத் தடுப்­பூசி போடும் பணியை நிர்­வா­கம் மேற்­கொள்­ளும்," என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!