காஞ்சிபுரம்: தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் உள்ள ஏரிகள், ஆறுகள், குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
காஞ்சிபுரத்தில் 138 ஏரிகளும் செங்கல்பட்டில் 89 ஏரிகளும் திருவண்ணாமலையில் 44 ஏரிகளும் என ஆகமொத்தம் 272 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளன.
205 ஏரிகள் 75%, 234 ஏரிகள் 50%, மீதமுள்ள 188 ஏரிகள் 25 விழுக்காட்டுக்கு குறைவாகவும் நீர் நிரம்பியுள்ளன. இங்குள்ள மொத்த ஏரிகளின் எண்ணிக்கை 1022 ஆகும். சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து பாதுகாப்புக்காக உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.