காய்கறிகள் விலை இருமடங்காக உயர்வு

சென்னை: கோயம்­பேடு சந்தை­யில் காய்­க­றி­க­ளின் விலை கிட்­டத்­தட்ட இரு மடங்­காக அதி­க­ரித்­துள்­ளது. இத­னால் மழை, வெள்­ளத்­தால் அவ­திப்­பட்டு வரும் மக்­கள் கவலை அடைந்­துள்­ள­னர்.

கடந்த சில தினங்­க­ளாக தமி­ழ­கம் முழு­வ­தும் கன­மழை நீடித்து வரு­கிறது. அண்டை மாநிலங்­க­ளி­லும் மழை பெய்து வரு­வ­தால், கோயம்­பேடு சந்­தைக்கு வர வேண்­டிய காய்­க­றி­கள் உரிய நேரத்­தில் வர­வில்லை. காய்­கறி வரத்து குறைந்­த­தால் தக்­காளி, உருளை உட்­பட பெரும்­பா­லான காய்­க­றி­க­ளின் விலை வெகு­வாக அதி­க­ரித்­தது.

60 ரூபாய்க்கு விற்­கப்­பட்ட தக்­காளி இப்­போது ரூ.110க்கு விற்­கப்­ப­டு­கிறது. தக்­காளி மட்டு­மின்றி மற்ற காய்­க­றி­க­ளின் விலை­யும் அதி­க­ரித்தே காணப்­ப­டு­கிறது. முருங்­கைக்­காய், கத்­த­ரிக்­காய், கேரட், வெண்­டைக்­காய் உள்­ளிட்ட காய்­க­றி­க­ளின் விலை­யும் இரு மடங்­காக அதி­க­ரித்­துள்­ள­தாக வியா­பாரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே வாடிக்­கை­யா­ளர்­கள் வருகை அறவே இல்லாததால், கோயம்­பேட்­டில் உள்ள பூ வியா­பா­ரி­கள் கடும் வரு­வாய் இழப்பை எதிர்­கொண்­டுள்­ள­னர். அங்கு தினந்­தோ­றும் விற்­ப­னை­யா­காத ஏரா­ள­மான பூக்­கள் சாலை­யில் கொட்­டப்­ப­டு­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!