விரும்பிய பெண்ணை 3வது மனைவியாக்க ஆசை; கொலை

சிவ­காசி: வத்­தி­ரா­யி­ருப்பு புதுப்­பட்­டி­யைச் சேர்ந்த மாரி­முத்து, 24, என்­ப­வர் தன் உற­வி­னர் பெண் ஒரு­வரை மணம் புரிய ஆசைப்­பட்டு ஏமாற்­றம் அடைந்­தார்.

அத­னால் வேறு ஒரு பெண்ணை திரு­ம­ணம் புரிந்­தார். அந்­தப் பெண் இரண்டு ஆண்­டு­கள் வாழ்ந்­து­விட்டு மாரி­முத்­து­வைக் கைவிட்­டு­விட்டு ஓடி­விட்­டார்.

அதை­ய­டுத்து மாரி­முத்து தான் முத­லில் விரும்­பிய உற­வுப் பெண்­ணைத் தனக்கு மணம் புரிந்து வைக்­கும்­படி மறு­ப­டி­யும் கேட்­டார். இருந்­தா­லும் பெண் வீட்­டார் சம்­ம­திக்­க­வில்லை.

அதனை அடுத்து மாரி­முத்து வேறு ஒரு பெண்ணை 2வது மனை­வி­யாக மணந்­தார். அவ­ரும் மாரி­முத்­துவை விட்டு ஓடி­விட்­டார்.

இத­னால் மீண்­டும் உற­வுப் பெண்ணை மண­மு­டிக்க முயன்று மாரி­முத்து தோற்­றார்.

அதே­வே­ளை­யில், அந்த உற­வுப் பெண்ணை செல்­வ­க­ணேஷ், 21, என்­ப­வ­ருக்கு மண­மு­டித்­துக் கொடுக்க பெண் வீட்­டார் முடிவு செய்­ததை அறிந்து செல்வகணேஷை தாக்கி தீவைத்து அவரை மாரி­முத்து கொன்­று­விட்­டார்.

இதை அவரே போலி­சி­டம் அளித்த வாக்­குமூலத்தில் தெரி­வித்­தார். புது மாப்­பிள்­ளை­யைக் கொன்று­விட்­டால் மணப்­பெண்ணை திரு­ம­ணம் செய்­து­கொள்ள யாரும் முன்­வ­ர­மாட்­டார்­கள், தானே திரு­மணம் செய்­து­கொள்­ள­லாம் என்­ப­தற்­காக மண­ம­க­னைக் கொன்­ற­தாக மாரி­முத்து தெரி­வித்­துள்­ளார். விசா­ரணை தொடர்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!