ரூ.1,000 கோடி வேண்டும்; பாமக ராமதாஸ் கோரிக்கை

சென்னை: புயல் மற்­றும் மழை நிவா­ர­ணப் பணி­களை மேற்­கொள்­வதற்­காக தமி­ழக அரசுக்கு மத்­திய அரசு முதற்­கட்­ட­மாக குறைந்­த­பட்­சம் ரூ.1,000 கோடி நிதி வழங்க வேண்­டும் என பாமக நிறு­வ­னர் மருத்­து­வர் ராம­தாஸ் கோரிக்கை விடுத்­துள்­ளார்.

தமிழ்­நாட்­டில் தொடங்­கி­யுள்ள வட­கி­ழக்குப் பரு­வ­மழை, வங்­கக்­க­ட­லில் உரு­வா­கி­ய காற்­ற­ழுத்தத் தாழ்வு மண்­ட­லம் ஆகி­யவை சென்னை மற்­றும் புற­ந­கர்ப் பகுதி­க­ளைக் கடந்து மாநி­லம் முழு­வ­தும் உள்ள மக்­க­ளுக்கு கடு­மை­யான பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்தி இருப்­பதை அவர் அறிக்­கை­யில் சுட்­டிக்­காட்­டி­னார்.

"பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உட­னடி நிவா­ர­ணம் வழங்­க­வும் சேதங்­களைச் சரி செய்­ய­வும் பெருந்­தொகை தேவைப்­படுகிறது.

"தமி­ழக அர­சி­டம் உள்ள பேரிடர் நிவா­ர­ண நிதி அதற்­குப் போது­மா­ன­தாக இல்லை என்­பதுதான் உண்மை.

"தமிழ்­நாட்­டில் ஏற்­பட்­டுள்ள பாதிப்­பு­களை மதிப்­பி­டு­வ­தற்­காக மழை ஓய்ந்த பின்­னர் அதி­கா­ரி­கள் குழுவை மத்­திய அரசு அனுப்பி வைக்க வேண்­டும்," என்­றும் மருத்­து­வர் ராம­தாஸ் கோரி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!