வ.உ.சிதம்பரானாரின் நினைவு நாள் தியாகத்திருநாளாக கடைப்பிடிப்பு

சென்னை: இந்­திய சுதந்­தி­ரத்­துக்­கா­கப் போரா­டிய வ.உ.சிதம்­ப­ர­னா­ரின் 85ஆவது நினைவு நாள் இன்று தியா­கத் திரு­நா­ளாகக் கடைப்­பிடிக்­கப்­ப­டு­கிறது.

இதை­யொட்டி தமி­ழக அரசு நேற்று வெளி­யிட்­டுள்ள செய்­திக்­குறிப்­பில், நாட்­டின் விடு­த­லைக்­கா­கத் தன்­னையே அர்ப்­ப­ணித்­துக் கொண்­ட­தோடு மட்­டு­மின்றி, தனது சொத்து சுகங்­க­ளை­யும் சொந்த பந்­தங்­க­ளை­யும் இழந்து அந்­நி­ய­ரால் இரட்டை ஆயுள் தண்­ட­னை­யை­யும் அனு­ப­வித்து, சிறை­யிலே செக்­கி­ழுத்த தியா­கச் செம்­ம­லின் திரு­வு­ரு­வச் சிலைக்கு அரசு சார்­பில் மரி­யாதை செலுத்­தப்­பட உள்­ள­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கப்­பல் கட்­டு­மா­னம் தொடர்­பான தொழில்­நுட்­பம், போக்­கு­வ­ரத்து ஆகிய துறை­களில் சிறந்த முறை­யில் பங்­காற்­றும் தமி­ழ­ருக்கு கப்­ப­லோட்­டி­யத் தமி­ழன் வ.உ.சி. விரு­து­டன் கூடிய ஐந்து லட்­சம் ரூபாய் ரொக்­கப்­ப­ரிசு வழங்­கப்­படும் என்று முதல்­வர் ஸ்டா­லின் அண்­மை­யில் அறி­வித்­தி­ருந்­தார்.

சிதம்­ப­ர­னா­ரின் வாழ்க்கை வர­லாற்றை பள்ளி மாண­வர்­கள் கண்டு பயன்­பெ­றும் வகை­யில் பேருந்து, புகைப்­ப­டக் கண்­காட்சி அமைக்­கப்­படும் என்­பது உள்­ளிட்ட வ.உ.சிக்கு பெருமை சேர்க்­கும் வகை­யில் 14 அறி­விப்­பு­களை வெளி­யிட்­டி­ருந்­தார் முதல்­வர் ஸ்டா­லின்.

அந்த அறி­விப்­பு­கள் அனைத்­தும் ஒவ்­வொன்­றா­கச் செயல்­ப­டுத்­தப்­படும் என தமி­ழக அரசு செய்­திக்­கு­றிப்­பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!