சென்னை: சவுதி அரேபியாவில் இருந்து 'ஸ்பேனர்' வடிவில் தங்கம் கடத்தி வந்த 32 வயது ஆடவரான மகபூப் பாஷா என்பவர் கைதானார்.
நேற்று முன்தினம் ரியாத் நகரில் இருந்து சென்னை வந்தடைந்த பயணிகள் வழக்கமான சுங்கப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது ஆந்திராவைச் சேர்ந்த மகபூப் பாஷா மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவரது உடமைகளை சோதித்தபோது, ஒரு பைக்குள் ஆறு வெள்ளை நிறத்திலான ஸ்பேனர் கருவிகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை ஆய்வு செய்தபோது, அவை தங்கத்தால் செய்யப்பட்டவை என்பதும் அவற்றின் சந்தை மதிப்பு சுமார் ரூ.47 லட்சம் என்பதும் உறுதியானது. இதையடுத்து அவர் கைதானார்.