குரங்கம்மை பல நாடுகளிலும் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் குரங்கம்மை பரவாமல் தடுக்க அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். விமான நிலையத்தில் வந்திறங்கியவர்களின் தோலில் கொப்புளங்கள் உள்ளனவா என அதிகாரிகள் சோதிக்கின்றனர். உமிழ்நீா், சளி போன்றவற்றின் மூலம் இந்நோய் பரவும் என்பதால் முகக்கவசம் அணிவதன் மூலம் இதனைப் பரவாமல் தடுக்கலாம் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
படம்: ஏஎஃப்பி