சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகவில்லை என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார். எங்களுக்கு ஒற்றுமையும் கூட்டுத் தலைமையும்தான் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
அதிமுகவில் பதவிச் சண்டை உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலை யில், பன்னீர்செல்வம் டெல்லியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளார். சென்னை திரும்பும் பயணத்தை அவர் ரத்து செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டதாக பழனிசாமியின் ஆதரவாள ரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருந்தார்.
அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்ட திலும் அடுத்த பொதுக்குழு கூட்டம் 11ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பபட்டதிலும் எந்த விதி மீறலும் இல்லை எனவும் அவர்கள் விளக்கம் கூறியுள்ளனர்.
இந்நிலையில், அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு தீர்மானம் செல்லாது என பன்னீர்செல்வம் தரப்பினர் மீண்டும் பதிலடி கொடுத்துள்ளனர்.
இதனிடையே, விழுப்புரத்தில் அதிமுக அலுவலகம், சுவரில் வரை யப்பட்ட ஓவியங்களில் இருந்து ஓபிஎஸ் உருவம் வெள்ளைச் சாயம் பூசி அழிக்கப்பட்டது. அதேபோல், வேதாரண்யத்தில் பழனிசாமி உருவபொம்மையை எரித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.