சென்னை: பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. ஒட்டுெமாத்தமாக தேர்ச்சி ெபற்ற மாணவர்களில் 10.13 விழுக்காடு அளவுக்கு மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
தேர்வு முடிவுகளின்படி மாணவர்கள் 84.86 விழுக்காடும் மாணவிகள் 94.99 விழுக்காடும் தேர்ச்சி அடைந்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்தது.
தமிழக அளவில் அதிக தேர்ச்சி விகிதத்தைக் (95.56 விழுக்காடு) கொண்ட மாவட்டங்களில் பெரம்பலூர் முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் விருதுநகர், மதுரை மாவட்டங்கள் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை விவரம் வெளியிட்டுள்ளது.