நீண்ட காலமாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாக அவரின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.
அவ்வப்போது மருத்துவ மனைக்குக் கொண்டுசென்று பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கவேண்டியிருப்பதாகவும் பிரேமலதா கூறினார்.
என்றாலும் விரைவில் அவர் பழைய நிலைக்குத் திருப்புவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் அதிபர் வேட்பாளரான திரவுபதி முர்மு ஆதரவு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பிரேமலதா பேசினார்.