திருச்சி: தமிழகத்தின் திருச்சியச் சேர்ந்த புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று (ஜூலை 6) குடமுழுக்கு விழா இனிதே நடந்தேறியது.
சமயபுரம் மாரியம்மன் சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாகப் போற்றப்படுகிறது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 2004 ஆம் ஆண்டுப்பிறகு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடமுழுக்கு, வேதங்களின் விதிப்படி கடந்த 2016 பிப்ரவரி 6-ந்தேதி மூலவர்,உள், வெளி பிரகாரங்கள், மேற்கு, தெற்கு, வடக்கு கோபுரங்களுக்கு மட்டும் கும்பாபிஷேகம் நடந்தது.
இன்று ஜூலை 6 ஆம் தேதி கல்காரம் எனப்படும் கருங்கற்களால் கட்டப்பட்ட கிழக்கு ராஜகோபுரத்திற்குத் தனியாக கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.
ராஜகோபுரத்தில் புனித நீர் அடங்கிய குடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சரியாக காலை 7.15 மணிக்கு ராஜகோபுரத்தில் உள்ள 7 கலசங்களுக்கும் சிவாச்சார்யார்கள் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தினர். அப்போது அங்கு குவிந்திருந்த பல்லாயிரக்கணக்கான மாரியம்மனின் பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற பக்தி கோஷம் எழுப்பி பரவசம் அடைந்தனர்.
-செய்தி: அனுபமா உதிவ்