சென்னை: தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திர பாபு பெயரில் போலி குறுந்தகவல்கள் பரவி வருவதாகவும் பொதுமக்கள் அவற்றை நம்ப வேண்டாம் என்றும் அவரது அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
"காவல்துறை தலைமை இயக்குநர் என்று அறிமுகம் செய்துகொண்டு, மோசடி குறுந்தகவல் அனுப்பும் ஒரு தரப்பினர் அமேசான் தளத்தின் அன்பளிப்பு கூப்பன்களை அனுப்புமாறு குறிப்பிடுகின்றனர்.
"இந்தத் தகவல் வாட்ஸ்அப், கைப்பேசி குறுந்தகவல்கள் வாயிலாக அனுப்பப்படுகின்றன. போலி குறுந்தகவல்களை அனுப்புவது யார் என விசாரணை நடைபெற்று வருகிறது," என்று காவல்துறை தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.