வேலூர்: வேலூர் கொணவட்டம் சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக காரில் சென்ற கும்பல் ஒன்று கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகளைக் கொட்டிவிட்டுச் சென்றுள்ளது.
இந்த நோட்டுகள் காற்றில் பறப்பதைக் கண்ட வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவற்றை போட்டி போட்டுக்கொண்டு எடுப்பதில் ஆர்வம் காட்டினர்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் வடக்குப் பகுதி காவலர்கள், அங்கு சிதறிக் கிடந்த ரூபாய் நோட்டுகளைச் சேகரித்து அவற்றை எண்ணியபோது 14 லட்சத்து 50,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன.
அவற்றை சோதித்தபோது, அனைத்தும் 'கலர் ஜெராக்ஸ்' எடுத்த கள்ள நோட்டுகள் என தெரியவந்தது. இந்த கள்ள நோட்டுகளை வீசிவிட்டுச் சென்றது யார் என காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.