விழுப்புரம்: மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி நேற்று தமிழகம் முழுவதும் கிராம சபைக் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உயரதிகாரிகள் கலந்து கொண்டு மக்களின் குறைகளைக் கேட்டறிவர்.
விழுப்புரம் மாவட்டத்தில் வீரபாண்டி கிராமத்தில் நடந்த கூட்டத்தில் மாநிலத்தின் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார்.
பொதுமக்கள் குடிநீர் பிரச்சினை, சாலை பிரச்சினை போன்ற பல பிரச்சினைகளை எழுப்பி கேள்வி மேல் கேள்வி கேட்டதையடுத்து பதில் சொல்ல முடியாமல் பாதியிலேயே அமைச்சர் வெளியேறிவிட்டார்.