சென்னை: மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் நேற்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி உருவப்படத்திற்குத் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், ஆளுநர் ஆர் என் ரவி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
"பேதங்களைக் கடந்து அன்பும் அமைதியும் மிளிரும் சமூகமாக இந்தியாவை உருவாக்கிட உழைத்த அண்ணல் காந்தியார் பிறந்த நாளில், சமத்துவமும் சகோதரத்துவமும் தழைக் கட்டும்; வெறுப்புணர்வைத் தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை; இது காந்திய மண் எனச் சூளுரைப்போம்" என்று டுவிட்டரில் முதல்வர் கூறினார்.