ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக இருந்தது கண்டுபிடிப்பு
கோவை: கோவை மாநகரில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக இருந்துவந்த 60க்கும் மேற்பட்ட வாலிபர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு உலமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் மனநலப் பயிற்சி வழங்கி நல்வழிப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர காவல் ஆணை யர் பாலகிருஷ்ணன் தலைமை யிலான குழுவினர் ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக இருந்து வந்த 60 பேரை மீட்டு நல்வழிப்படுத்தும் முயற்சியைத் தொடங்கியுள்ளனர்.
"இதற்கான திட்டத்தில் அந்த இளைஞர்களைப் பங்குபெற வைத்து அவர்களுக்கு நல்ல ஆலோசனைகளைக் கூறி ஐஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து அவர்களை வெளியே கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளோம்.
"உலமாக்கள் மூலம் நல்ல அறிவுரைகள் போதிக் கப்பட்டு, அவர்கள் நல்ல குடிமகன்களாக மாற்றப்படுவர்,'' என்று பால கிருஷ்ணன் மேலும் கூறியுள்ளார்.
கோவை மாவட்டம், உக்கடம் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு தீபாவளிக்கு முதல் நாளான 23ஆம் தேதியன்று கார் வெடிப்பில் ஜமேஷா முபின், 28, என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைதான நிலையில், என்ஐஏ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே, ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின்பால் ஈடுபாடு கொண்ட நபர்கள் குறித்த பட்டி யலை காவலர்கள் திரட்டினர்.
சந்தேகப்படும்படி உள்ளவர்களின் இல்லங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கோவை கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது முதல் மாநிலம் முழுவதும் பாதுகாப்பாக இருக்க வாகனச் சோதனை, முக்கிய இடங்களைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளைக் காவலர்கள் முடுக்கிவிட்டுள்ளனர்.
உக்கடம் சங்கமேஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் இப்போது வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உயர் அதிகாரிகளின் உத்தர வுப்படி உளவுத்துறை காவலர்களும் பலரையும் கண்காணித்து வருகின்ற னர்.