மோசடி நிதிநிறுவன நிர்வாகிகள் 15 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தது காவல்துறை

1 mins read

சென்னை: ஹிஜாவு நிதி நிறு­வன நிர்­வா­கி­கள் 15 பேரைத் தேடப்­படும் குற்­ற­வா­ளி­க­ளாக அறி­வித்­துள்­ளது தமி­ழ­கக் காவல்­துறை.

மேலும், தலை­ம­றை­வாக உள்ள அவர்­க­ளு­டைய புகைப்­ப­டங்­களும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

சென்னை கீழ்ப்­பாக்­கத்­தில் இயங்கி வந்த 'ஹிஜாவு அசோ­சி­யேட்ஸ்' என்ற நிதி நிறு­வ­னம் பொது மக்­க­ளி­டம் இருந்து பல நூறு கோடி ரூபாய் வசூ­லித்து மோசடி செய்­துள்­ளது.

தங்­கள் நிறு­வ­னத்­தில் முத­லீடு செய்­தால் மாதந்­தோ­றும் 15 விழுக்­காடு வட்டி தரு­வ­தாக அந்­நி­று­வ­னம் கவர்ச்­சி­கர அறி­விப்பை வெளி­யிட்­டது. அந்­நி­று­வ­னத்­தின் முக­வர்­களும் பணி­யா­ளர்­களும் தமி­ழ­கம் முழு­வ­தும் நட்­சத்­திர தங்­கு­வி­டு­தி­களில் கூட்­டங்­கள் நடத்தி கவர்ச்சி அறி­விப்­பு­களைப் பொது­மக்­கள் நம்­பும்­படி பிர­சா­ரம் செய்­த­னர்.

அந்த வகை­யில் தமி­ழ­கம் முழு­வ­தும் 14,126 முத­லீட்­டா­ளர்­க­ளி­ட­மி­ருந்து ரூ.1,046 கோடி வசூ­லிக்­கப்­பட்­டது.

ஓரி­ரு மாதங்­கள் வட்­டித்­தொகை­யைக் கொடுத்த ஹிஜாவு நிறு­வ­னம் பின்­னர் முன்­ன­றி­விப்பு இன்று திடீ­ரென மூடப்­பட்­டது.

இதை­ய­டுத்து, அந்­நி­று­வ­னம் மீது மோசடி வழக்­குப் பதி­வா­னது. அந்­நி­று­வ­னத்­து­டன் சம்­பந்­தப்­பட்ட இடங்­களில் காவல்­துறை சோதனை­ ந­ட­வ­டிக்கை மேற்­கொண்­டது. இந்­நி­லை­யில் அந்­நி­று­வ­னத்­தின் நிர்­வா­கி­கள் சிலர் கைதா­கி­னர். எனி­னும் 15 முக்­கிய நிர்­வா­கி­கள் தலை­ம­றை­வா­கி­னர்.

அவர்­களில் பலர் வெளி­நா­டு­க­ளுக்­குத் தப்­பிச் சென்­றி­ருக்­க­லாம் என்று கரு­தப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், இவர்­க­ளைத் தலை­ம­றைவு குற்­ற­வா­ளி­க­ளின் எனக்­கு­றிப்­பிட்டு புகைப்­ப­டங்­களைப் பொரு­ளா­தார குற்­றப்­பிரிவு காவல்­துறை வெளி­யிட்­டது.

மேலும், பொது­மக்­கள் அவர்­க­ளைப் பற்றி தெரி­விக்­கும் தக­வல் உண்­மை­யா­ன­தாக இருந்­தால் தக்க சன்­மா­னம் அளிக்­கப்­படும் என்­றும் தேடுதல் நடவடிக்கை நீடிப்பதாகவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.