குழந்தை ஊழியர்கள் இல்லையாம்
அம்பத்தூர்: ஆவின் பால் பண்ணையில் விதிகளை மீறி சிறார்கள் பணியமர்த்தப்பட்டதாகவும் சரிவர ஊதியம் வழங்கப்படாததால் சிறார்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாகவும் தகவல் பரவியது. இதனையடுத்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அம்பத்தூர் ஆவின் பால் கொள்முதல் நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட சிறார்கள், குழந்தைத் தொழிலாளர்கள் வேலை செய்வதாக பரப்பப்பட்ட செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை,” என்றார்.
வித்தியாசமான விழிப்புணர்வு முயற்சி
சாலையில் விமானப் பணிப்பெண் உடையில் திருநங்கைகள். படம்: தமிழக ஊடகம்
சென்னை: சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அனைத்துலக ரோட்டரி சங்கத்துடன் இணைந்து திருநங்கைகள் மூலம் சென்னை நகரின் பல்வேறு சாலைச் சந்திப்புகளில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. போக்குவரத்து விளக்கு சிவப்பு நிறத்தில் இருக்கும்போது வாகனங்கள், இருசக்கர வாக னங்களில் செல்வோர் மற்றும் சாலையைப் பயன்படுத்து வோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆறு திருநங்கைகள் கொண்ட குழுவினர் விமானப் பணிப்பெண்போல உடை அணிந்து இருக்கை வார் மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசி யத்தை கை சமிக்ஞை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.