இளையர் முரசு

மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூர், ஈப்போ மாநிலம் ஆகியவற்றிலுள்ள தொடக்கப்பள்ளி, பல்கலைக்கழகங்கள், ஆசிரியர் பயிற்சி வழங்கும் பல்கலைக்கழகம், பயிற்சிக் கல்லூரி ஆகிய கற்றல் நிலையங்களுக்குப் பயணக்குழு சென்றிருந்தது. 16 பேர் கொண்ட இப்பயணக்குழுவில் மாணவ ஆசிரியர்களுடன் தமிழ்த்துறை விரிவரையாளர்களும் இடம்பெற்றிருந்தனர். ஒரே பயணத்தில் ஐந்து கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் வகையில் பயணம் நடைபெறுவது இதுவே முதல் முறை.
மக்களுக்கு எரிச்சலூட்டும் ஓர் உயிரினம், சிங்கப்பூரின் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றைச் சமாளிக்க உதவுகிறது என்று சொன்னால் அதை நம்புவீர்களா? உருவத்தில் சிறுத்தாலும் இந்த ஈவகையை, ‘பிளாக் சோல்ஜர் ஃபிளை’ அதாவது, ‘படைவீரன் ஈ’ என்று அழைப்பர்.
அனைத்துலக உபகாரச் சம்பளத்திற்குத் தகுதிபெற்றதன் மூலம் சிங்கப்பூருக்குப் படிக்க வந்த ராகுல் ராஜு, 22, தனது வேலைப் பயிற்சித் திட்டம் முடியும் முன்னரே ‘எஸ்எம்ஆர்டி’ போக்குவரத்து நிறுவனத்தில் ஒரு முழுநேரப் பணியை உறுதிசெய்துவிட்டார். 
வேலை கலாசாரம் இன்றைய நவீன யுகத்தில் கணிசமான மாற்றங்களைச் சந்தித்துவருகிறது. இந்த மாற்றங்களை முன்னெடுத்துச் செல்பவர்கள், இளம் தொழில் நிபுணர்கள். தொழில்நுட்ப முன்னேற்றத்தாலும் மாறிவரும் சமூக வழக்கங்களாலும் வேலையிடத்தில் நீக்குப்போக்குத் தன்மை இருப்பது முக்கியம் என்றும் இளம் தலைமுறையினர் கருதுகின்றனர். அதனால், தங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தங்களது வாழ்க்கைத்தொழிலுக்கும் இடையே சமநிலை காணும் வேலைச் சூழல்களை நாடுகின்றனர். இதுகுறித்து, அறிந்து வந்தது இவ்வார இளையர் முரசு.
புகழ்பெற்ற அமெரிக்கப் பாடகி டெய்லர் சுவிஃப்ட்டின் இசை நிகழ்ச்சி தொடர்பான நுழைவுச்சீட்டு மோசடியில் இவ்வாண்டு ஜனவரிக்கும் பிப்ரவரிக்கும் இடைப்பட்ட காலத்தில் குறைந்தது 334 பேர், $213,000க்கும் அதிகமான தொகையை இழந்தனர். இது ஒருவகையான மோசடி மட்டுமே. இவ்வாறு நூதன முறையில் ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன; பலவகையாகிவிட்டன. இதுகுறித்து இளையர்கள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கின்றனர்.