சிங்க‌ப்பூர்

செம்பவாங்கில் உள்ள வாடகை வீட்டில் 2021 செப்டம்பரில் மாது ஒருவர் தீ மூட்டியதைத் தொடர்ந்து, அவருடைய முன்னாள் காதலருக்கு உடலில் 15 விழுக்காடு அளவுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன.
தெம்பனிசில் புதன்கிழமை (ஏப்ரல் 22) இருவரின் உயிரைப் பறித்த விபத்துக்குப் பிறகு காயமுற்றவர்களுக்கு உதவிய திரு ஷேக் இம்ரான் ஷேக் அகமது, 40, சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து தாம் இன்னமும் மீளவில்லை என்று கூறினார்.
தாவர வகை புரதச்சத்து உணவை வாடிக்கையாளர்களை ஏற்றுக்கொள்ள வைக்கும் முயற்சியாக புதிய நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இந்த தாவர வகை புரதம் நிறைந்த உணவு வகைகளின் ருசி, ஊட்டச்சத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுவாக நார்வே, ஐஸ்லாந்து, பின்லாந்து போன்ற உலகின் வடக்குப் பகுதிகளில் மட்டுமே காணக்கூடிய ‘பொரியாலிஸ்’ என்ற இயற்கையான ஒளி அமைப்பு சிங்கப்பூர் கரையோரப் பூந்தோட்டத்தில் செயற்கையாக அமைக்கப்படுகிறது.
பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்த தகவல்களை சிங்கப்பூரும் எஸ்டோனியாவும் பகிர்ந்துகொள்ளலாம் என்று எஸ்டோனியாவின் கல்வி, ஆய்வு அமைச்சர் திருவாட்டி கிறிஸ்டினா கல்லாஸ் தெரிவித்துள்ளார்.