சிங்க‌ப்பூர்

காயம் விளைவிவிக்கக்கூடிய கருவிகளை சிங்கப்பூருக்குள் கொண்டுவருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரும் புருணையும் அவற்றுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த உணவுப் பாதுகாப்பு, பசுமை நடவடிக்கை, உலக அரங்கில் இரு நாடுகளின் குரலுக்கு கூடுதல் மதிப்பை உருவாக்குவது போன்ற அம்சங்களில் இணைந்து செயல்படவேண்டும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
பிரதமர் லீ சியன் லூங், ஆசியான்-ஜப்பான் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பைக் குறிக்கும் 50ஆம் ஆண்டு நிறைவு உச்சநிலைக் கூட்டத்தில் பங்கேற்க டிசம்பர் 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை ஜப்பான் தலைநகர் தோக்கியோவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
நான்கில் ஒரு சுகாதாரப் பராமரிப்பு ஊழியர் வேலையிடத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக 2022ஆம் ஆண்டில் சுகாதார அமைச்சு நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்தது.
நொடிப்புநிலைச் சட்டத்தின்கீழ் மருத்துவர் கோ செங் ஹெங் மீது 13 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவர் நொடித்துப்போனவர் என்று 2020ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.