தலையங்கம்

இன்று தமிழ்முரசு நிறுவனர் தமிழவேள் கோ.சாரங்கபாணியின் பிறந்தநாள்.
பருவங்கள் மாறி மாறி வருகையில் ஏதோ ஓர் இடத்தில் தொடங்கி மறுபடியும் அவ்விடத்தையே அடைகிறது என்பதைக் கண்கூடாக அறிய முடிகிறது. தொடக்கமென்பது ஒரு மறுமலர்ச்சியை, புத்துணர்வை, மகிழ்ச்சியைக் கொடுக்ககூடியதாக அமைவதையே மனம் விரும்புகிறது. குளிர்காலம் முடிந்து, தாவரங்கள் துளிர்க்கும் காலம், மலர்கள் பூக்கும் காலம், ஆதவனின் கதிர்கள் பூமிக்கு இதமான வெப்பத்தைப் பரப்பும் காலம் இளவேனிற்காலம். அதுவே தொடக்கமெனப் பல்லாண்டு காலமாய் மனத்தில் தோன்ற சித்திரையே முதல் மாதமானது. நம் கலாசாரத்திற்குத் தெரிந்தது இம்மாதங்கள்தாம். இதனைத் தவிர்த்து, ராசிகளின் அடிப்படையில் மாத வரிசைகள் அமைவதும் உண்டு. அவையும் சித்திரை மாதத்தில்தான் தொடங்குகின்றன. 
எல்லா நன்மைகளும் பெற்றிருக்கும் சிங்கப்பூரில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் மாணவர்கள் தமிழ் படிக்கிறார்கள்.
மாதருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் சிங்கப்பூர் பெரிதும் முன்னேறியுள்ளது. ஆனால், அவர்கள் ஆண்களை விடக் குறைவாகவே ஊதியம் பெறுகின்றனர். பாலினத்தவரிடையே இருக்கும் ஊதிய இடைவெளியைக் கணக்கிடும் முறையைக் கொண்டு இந்த முடிவுக்கு வரவேண்டியுள்ளது. அந்த முறைப்படி ஆடவர்களின் சராசரி ஊதியம், மாதர்களின் சராசரி ஊதியம், இரண்டுக்கும் இடையே இருக்கும் ஊதிய இடைவெளி எந்த விழுக்காடு அளவில் இருக்கிறது என்பதைத் தெரிவிப்பதே இந்த கணக்கீடு முறை.
மெடிஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டம் புதிய, புத்தாக்கமான சிகிச்சைகளையும் உள்ளடக்கும் என்ற அண்மை அறிவிப்பு, இந்தத் திட்டத்தின் நோக்கத்தை ஒட்டியே அமைந்துள்ளது.