தலையங்கம்

சிங்கப்பூர்க் கல்விக் கொள்கையின் முக்கியக் கூறுகளில் ஒன்று இருமொழிக் கொள்கை. அதன் பயனாக இன்று சிங்கப்பூர் மக்களில் 97.1 விழுக்காட்டினர் இரண்டு அல்லது அதற்கு மேலான மொழிகளில் ஆற்றல் பெற்றுள்ளனர். இந்தியர்கள் மத்தியில் அந்த விகிதம் 98.4%ஆக உள்ளது.
இந்தியாவில் புதிதாகக் கட்டப்பட்டு உள்ள நாடாளுமன்றக் கட்டடத்தில் வரலாற்று முக்கிய முதல் சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. அங்கு சிறப்புக்கூட்டத்தை நடத்தி மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றி இருக்கிறது.
சிங்கப்பூர் இப்போது உலகமே புகழ்ந்து பேசும் ஒரு நாடாகத் திகழ்கிறது. அந்த நாட்டின் கடப்பிதழ் கையில் இருந்தால் அதுவே ஓர் அனுகூலமாக அங்கீகரிக்கப்படுகிறது.
உலகின் மிக முக்கியமான 20 நாடுகள் சேர்ந்து ஜி20 என்ற அமைப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் ஆண்டுதோறும்கூடி உலக அளவில் நிலவும் அரசியல், பொருளியல் பிரச்சினைகள் பற்றி பலவற்றையும் விவாதித்து இணக்கம் கண்டு கூட்டு அறிக்கை வெளியிட முயல்வது உண்டு.
பொருளியல் படு வேகத்தில் உருமாறி வருகிறது. சொல்லப்போனால் அதன் எல்லா துறைகளுமே முன்பு இருந்ததைப் போல் இப்போது இல்லை. அவை செயல்படும் முறைகள் தலைகீழ்மாற்றம் காண்கின்றன. போகப்போக இந்த நிலை நீடிக்கும், வேகமடையும் என்பது தவிர்க்க இயலாததாகி வருகிறது.