சிங்கப்பூர் குடும்பங்களுக்கு இன்றுமுதல் $300 சமூக மேம்பாட்டு மன்ற பற்றுச்சீட்டுகள்

ஒவ்வொரு சிங்கப்பூர் குடும்பமும் இன்றுமுதல் $300 மதிப்பிலான சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம். அவற்றில் பாதியளவு, அதாவது $150 பற்றுச்சீட்டுகள், திட்டத்தில் பங்குபெறும் பேரங்காடிகளில் பயன்படுத்துவதற்குரியவை.

ஃபேர்பிரைஸ், ஷெங் சியோங், பிரைம், ஹாவ் மார்ட், யூ ஸ்டார்ஸ் ஆகிய ஐந்து பேரங்காடிகளில் இந்தப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம். சிங்கப்பூர் முழுவதும் இந்நிறுவனங்களிடம் 300க்கும் மேற்பட்ட பேரங்காடிகள் உள்ளன.

இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 'சிடிசி' பற்றுச்சீட்டுகள் பேரங்காடிகளில் பயன்படுத்த முடிவது இதுவே முதன்முறை. ஜயண்ட், கோல்ட் ஸ்டோரேஜ் போன்ற கூடுதலான பேரங்காடிகள் பின்னர் இத்திட்டத்தில் சேர்க்கப்படலாம்.

எஞ்சிய $150 மதிப்பிலான பற்றுச்சீட்டுகளை ஏறத்தாழ 20,300 உணவங்காடிக் கடைகள் மற்றும் வீடமைப்புப் பேட்டைகளில் இயங்கும் வணிகங்களில் பயன்படுத்தலாம்.

விலைவாசி உயர்வு மற்றும் பொருள், சேவை வரி உயர்வின் தாக்கத்தைத் தணிக்கும் விரிவான தொகுப்புத் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்தப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுவதாக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

கம்போங் அட்மிரல்ட்டியில் நடைபெற்ற 'சிடிசி' பற்றுச்சீட்டுகளின் தொடக்க நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!