எண்ணெய் கப்பல்களைத் தாக்கியதில் ஈரானுக்கு தொடர்பு இருப்பதாக வெளிவந்த காணொளி

ஓமான் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பனாமா, நார்வே நாடுகளைச் சேர்ந்த எண்ணெய் கப்பல்களில் நேற்று காலை பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் இரு கப்பல்களிலும் தீப்பிடித்தன.

கப்பல்களிலிருந்து எழுந்த அபாய ஒலியைக் கேட்டு அந்த பகுதியில் இருந்த அமெரிக்க கடற்படை விரைந்து வந்து இரு கப்பல்களிலும் இருந்த 44 பேரை பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. வீடியோ ஆதாரங்கள் மூலம் ஈரானுக்கு தொடர்பு இருப்பது அம்பலமாகியிருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. எனினும், ஈரான் இந்தக் குற்றச்சட்டை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

எண்ணெய் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதன் மூலம் உலகளவில் எண்ணெய் விலை அதிகரிப்புக்கு வழி வகுக்கிறது என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் 11-ம் தேதி சவூதி அரேபியாவின் இரண்டு எண்ணெய் கப்பல்கள் உள்பட நான்கு வெளிநாட்டு கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதன் பின்னணியில் ஈரான் இருப்பதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. சவூதி அரேபியாவும் சில மத்திய கிழக்கு நாடுகளும் ஈரான் மீது இதே குற்றச்சாட்டை முன்வைத்தன.

ஆனால் ஈரான் இதனை மறுத்துள்ளது.

ஈரான்- அமெரிக்கா இடையிலான மோதல் காரணமாக மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து பதற்றநிலை நிலவுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!