மும்பையில் கனமழை; குறைந்தது 20 பேர் மரணம்

இந்தியாவின் மும்பை நகரில் இரண்டாவது நாளாகத் தொடர்ந்து பெய்த கனமழையால் குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர். வாகனப் போக்குவரத்து, ரயில் சேவை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில் வேலையிடங்களும் பள்ளிகளும் வேறு வழியின்றி விடுப்புகளை அறிவித்துள்ளன.

மழையால் 69 பேர் காயமடைந்தனர். அனைத்துலக நிதித்துறை மையமாகத் தன்னை உருமாற்றிக்கொள்ள ஆசைப்படும் மும்பையின் உள்ளமைப்பு, கனமான மழையைச் சமாளிக்க இயலாமல் திணறுகிறது.

மலட் என்ற பகுதியில் கனமழை சுவர் ஒன்றை இடித்துத் தள்ளியதாக அவ்வட்டாரத்தின் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். “மீட்புப் பணிகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. அவசரச் சேவைத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பொதுமக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். மேல் விவரங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்,” என்று அந்த அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரமாக 300 மில்லிலீட்டர் மழை சில இடங்களில் பெய்தது. இதனால் முழு வீதிகள் அடைக்கப்பட்டிருந்தன.

மும்பையின் அனைத்துலக விமான நிலையத்திலும் விமானப் பயணங்கள் தாமதமாயின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!