ஜாலான் புரோவிலுள்ள உடைசல் கிடங்கில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
தீச்சம்பவம் பற்றி நேற்றிரவு 8 மணி வாக்கில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு சுமார் 9.15 மணிக்குள் அந்தத் தீ அணைக்கப்பட்டது. தீக்காயங்கள் பட்ட ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
குடிமைத் தற்காப்புப் படை இந்தச் சம்பவத்தின் காரணத்தை ஆராய்ந்து வருகிறது. சம்பவ இடத்தில் எரிந்த தீயிலிருந்து கரும்புகை கிளம்பி வானத்தை நிரப்புவதைச் சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்ட படங்களும் காணொளிகளும் காட்டுகின்றன.