இந்தியாவும் நியூசிலாந்தும் மோதும் உலகக் கிண்ண கிரிக்கெட் அரையிறுதியில் நியூசிலாந்து அணி இதுவரை 5 விக்கெட்டுக்கு 211 ஓட்டங்கள் (46.1 ஓவர்) எடுத்துள்ளது. இங்கிலாந்தின் மன்செஸ்டர் நகரில் நேற்று மாலை நிகழ்ந்த அந்த ஆட்டத்தின்போது பெய்த மழையால் அந்த ஆட்டம் இன்று தொடரும்.
பூவா தலையாவில் வென்ற நியூசிலாந்து அணித்தலைவர் வில்லியம்சன் முதலில் மட்டையடிப்பதாக முடிவு செய்தார். இதன்படி, நியூசிலாந்து அணியைச் சேர்ந்த மார்ட்டின் கப்திலும் ஹென்றி நிகோல்சும் ஆட்டத்தைத் தொடங்கினர்.
இன்னிங்சின் 17ஆவது பந்து வரை நியூசிலாந்து எந்த ஓட்டத்தையும் எடுக்கவில்லை. 14ஆவது ஓவருக்குப் பிறகு நியூசிலாந்து விளையாட்டாளர்களை இந்திய விளையாட்டாளர்கள் வெகுவாகக் கட்டுப்படுத்தினர்.
இந்த ஆட்டம் எவ்வளவு விரைவில் முடியுமோ அந்த அளவுக்கு நியூசிலாந்திற்குச் சாதமாக இருக்கும் என்பது சிலரின் ஊகம். ஆயினும், புள்ளிகளின் அடிப்படையில் இந்தியாவுக்குச் செல்லும் வாய்ப்புகளும் அதிகமாகும் என்றும் வேறு சிலர் கூறுகின்றனர்.