புளோக் 574 அங் மோ கியோ அவென்யூ 5லுள்ள நகைக் கடை ஒன்றிலிருந்து 100,000 வெள்ளி பெறுமானமுள்ள ஆபரணங்களைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று ஆடவர்களில் ஒருவர், விசாரணை நிமித்தமாக அதே கடைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
27 வயதுக்கும் 31 வயதுக்கும் இடைப்பட்ட அம்மூவர் திருடிய நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டதாக போலிசார் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16ஆம் தேதி) தெரிவித்தனர்.
எம். ஜெகதீஷ் என்ற சந்தேக நபரை விசாரணை அதிகாரி ஒருவர் இன்று சம்பவ இடமான ‘ஹொக் சியோங் ஜேட் என்ட் ஜுவல்லரி’ கடைக்கு அழைத்து சென்றார். ஜெகதீஷ் சிவப்பு நிற சட்டை அணிந்திருப்பதாக தமிழ் முரசு நிருபர் வைதேகி ஆறுமுகம் எடுத்த காணொளி காட்டுகிறது.
தற்போது மத்திய போலிஸ் பிரிவின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஜெகதீஷ் வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாகவேண்டும்.