நிதி ஆதரவு வழங்கி தொடக்கம் கண்ட சிண்டா எனும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் இப்போது பலவித சவால்களை எதிர்நோக்குபவர்களுக்கு உதவ திட்டங்களை வகுத்துள்ளது என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்தார்.
பீட்டி ரோட்டில் அமைந்துள்ள சிண்டாவின் நிலையத்துக்கு நேற்று வருகையளித்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
“சிண்டா மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. கடந்த காலத்தில் நிதி உதவி மட்டுமே வழங்கியது.
“தற்போது சமூகத்திற்கும் குடும்பங்களுக்கும் ஆதரவ ளிக்கும் விரிவான உதவி திட்டங்களை வழங்கி வருகிறது,” என்றார் அவர்.
உதவி தேவைப் படும் குடும்பங்கள், சிறைக்குச் சென்ற உறுப்பினர்களின் குடும்பங்கள், கல்வி தேவைப்படும் குழந்தைகள் உள்ளிட்ட திட்டங்களை அவர் சுட்டிக்காட்டினார்.
சுய உதவிக் குழுக்கள் ஒருங் கிணைந்த, ஒற்றுமையான சமு தாயத்தை உருவாக்க முக்கிய பங்காற்றுகின்றன என்று மேலும் தெரிவித்தார் அதிபர் ஹலிமா.
இந்திய சமூகத்தின் பிரச்சினைகள் பற்றி அறிந்துகொள்ள அதிபர் ஹலிமா, சிண்டா பயனாளிகள், தொண்டூழியர்கள் ஆகியோரையும் சந்தித்து உரையாடினார்.
சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு அன்பரசு இராஜேந்திரன், இந்திய சமுதாயத்தை உன்னிப்பாக கவனித்ததில் கல்வியில் மட்டுமல்லாமல் பொருளாதாரம், குடும்ப மேம்பாடு எனப் பல நிலைகளில் பிரச்சினைகள் இருக்கின்றன என்றும் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே சிண்டாவின் இலக்கு என்றும் தெரிவித்தார்.