மகாராஷ்டிராவில் மூன்று மாடிக் கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் பலியானோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் உள்ள படேல் வளாகத்தில் அமைந்துள்ள அந்தக் கட்டடம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு இடிந்து விழுந்தது.
தேசிய பேரிடர் மீட்பு படையினர் இன்று காலை எட்டு பேரின் சடலங்களை இடிபாடுகளிலிருந்து அகற்றினர். மாண்டோரின் எண்ணிக்கை தற்போது 10க்கு உயர்ந்துவிட்டதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. அத்துடன் உயிர் தப்பிய சுமார் 20 பேர் மீட்கப்பட்டு காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன்பின்னர் மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து முழுவீச்சில் மீட்பு பணி நடைபெறுகிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிய தலைவர்கள் தங்களது சமூக ஊடகப் பக்கங்களின் மூலம் இரங்கல் தெரிவித்தனர்.