மாலை 5 மணி வரை 63.60% வாக்குப் பதிவு
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க மக்கள் பேரார்வம் காட்டியதாகவும் காலை 7 மணிக்குத் தொடங்கியதில் இருந்தே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாயின. இந்திய நேரம் பகல் 11 மணி நிலவரப்படி மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் சராசரியாக 26.9% வாக்குகள் பதிவான நிலையில் மாலை 5 மணியளவில் அது 63.60% ஆக அதிகரித்தது.
இதே வேகம் மாலை வரை நீடித்தது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்களிப்பு நிலையங்களில் திருவிழா கூட்டம் காணப்பட்டது. கொவிட்-19 விதிகள் காரணமாக வாக்காளர்கள் ஒரு மீட்டர் இைடவெளியில் நிற்க வைக்கப்பட்டனர். கை சுத்திகரிப்பு திரவத்துளிகள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டன. உடல்வெப்பநிலையும் பரிசோதிக்கப்பட்டது.
சென்னையிலுள்ள ஆவடியிலும் கோவையின் அவினாசியிலும் உதயசூரியன் சின்னத்தை அழுத்தும்போது இரட்டை இலை சின்னத்தில் விளக்கு எரிவதாகப் புகார் எழுந்தது. அதேபோல விருது நகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் உதயசூரியனுக்குப் பதில் தாமரை சின்னத்தில் விளக்கு எரிவதாகத் தெரிவிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து அங்கு சிறிது நேரம் வாக்களிப்பு நிறுத்தி வைக்கப்பட்ட தாகத் தகவல் வந்தது. ஆயினும் அதுபோன்ற தகவல்களை தமிழகத் தேர்தல் அதிகாரி மறுத்தார். உரிய சின்னத்திற்கு வாக்கு விழும் என்று அவர் உறுதியாகக் கூறினார். பர
பரப்பு தொற்றிய நிலையில் வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தமிழகத்தைப் போலவே கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் நேற்று ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. பல கட்டத் தேர்தல் தொடங்கி விட்ட மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் நேற்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது.
அரசியலில் பழுத்த அனுபவம் பெறற கருணாநிதியும் 2016 ேதர்தலில் துணிச்சலுடன் தனித்து களம் கண்டு அதிமுகவை தொடர்ந்து ஆட்சியில் அமர வைத்த ஜெய
லலிதாவும் உயிருடன் இல்லாத நிலையில் நடைபெற்றிருக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது. எனவே, இதன் முடிவுகளை ஒட்டுமொத்த இந்தியாவே உற்றுநோக்குகிறது.
2016 தேர்தலில் அதிமுக 134 இடங்களிலும் திமுக 89 இடங்
களிலும் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றிபெற்றன.