இந்தியாவின் கிருமித்தொற்று நிலவரம் ஒவ்வொரு நாளும் மோசமடைந்து வரும் நிலையில் நேற்று ஆக அதிகமான மரணங்கள் அங்கு பதிவாயின. ஒரே நாளில் 4,187 பேர் கொரோனா கிருமித்தொற்றுக்குப் பலியாகிவிட்டனர்.
இதன் காரணமாக இந்தியாவில் நிகழ்ந்த தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 240,000ஐ நெருங்கியுள்ளது.
மேலும் நாடு முழுவதும் பல மாநிலங்களில் 24 மணி நேரம் பதிவான கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 401,078 என பதிவாகி இருப்பதாக இந்தியாவின் சுகாதார அமைச்சு அதன் அறிக்கையில் குறிப்பிட்டது. இதன் மூலம் அங்கு இதுவரை பதிவாகி உள்ள தொற்றுச் சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 21.9 மில்லியனுக்கு உயர்ந்துவிட்டது. ஆயினும் இந்தியாவில் தற்போது இரண்டாம் அலை கிருமிப்பரவல் உக்கிரமடைந்து இருப்பதால் அங்கு ஒவ்வொரு நாளும் பதிவாகும் தொற்று
களின் எண்ணிக்ைகயும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகாரபூர்வ எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாக இருக்கக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
மார்ச் மாதம் அன்றாடம் பதிவான எண்ணிக்கை 20,000க்கும் கீழ் இருந்து வந்த நிலையில் ஏப்ரலில் அந்த எண்ணிக்கை வேகமாக உயர்ந்து அந்த மாதத்தில் மட்டும் சுமார் 6.6 மில்லியன் தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின.