எஸ்பிஎச் ஊடகத் தொழில்கள் சீரமைக்கப்பட்டு புதிதாக அமைக்கப்படும் லாபநோக்கற்ற நிறுவனத்திற்குத் தலைவர் பொறுப்பை ஏற்கும் முன்னாள் அமைச்சர் திரு கோ பூன் வான், (படம்) இந்தத் தேசிய திட்டம் வெற்றி பெற ஆன அனைத்தையும் செய்யப்போவதாக அறிக்கையில் தெரிவித்தார்.
"இது பெரும் பொறுப்பு. மின்னிலக்க ஊடகத்தில் எனக்கு அனுபவம் இல்லை. ஆகையால் கொஞ்சம் தயக்கத்துடன் இதை ஏற்றுக்கொண்டேன்.
"உலகின் பல இடங்களில் இடம்பெற்ற வெற்றிகரமான உருமாற்ற திட்டங்கள் மூலம் ஏற்புடைய அனுபவங்களை எப்படிக் கை கொள்வது என்பதை ஆராய்வேன்.
"இந்தப் புதிய பொறுப்பு என்ஓய்வுக் காலத்தைப் பாதிக்கும் என்றாலும் சிங்கப்பூரை சேர்ந்த ஒரு நிறுவனம் இறங்குமுகமாகிவிட என்னால் அனுமதிக்க முடியாது. செய்தி அறையில் ஆற்றலும் வேட்கையும் இடம்பெற எப்படி உதவலாம் என்பதை ஆராய்வேன்.
"இந்த இளம் நாட்டை பலப்படுத்த உதவும் வகையில் தரமான செய்தித் துறையை நிலைநாட்ட வேண்டும் என்ற நம் அடிப்படை இலக்கில் மீண்டும் ஒருமித்த கவனம் செலுத்துவோம்," என்று திரு கோ குறிப்பிட்டார்.