சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 13 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
சமூகத்தொற்றுக்கு ஆளான 10 பேரும் அவர்களில் அடங்குவர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சமூகத்தொற்று ஏற்பட்டவர்களில் இருவருக்குத் தொடர்பில்லா தொற்று இருந்தது தெரிய வந்தது.
வெளிநாடுகளில் இருந்து வந்த மூவருக்கு கிருமித் தொற்று இருந்ததை அடுத்து அவர்களுக்குத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் புதிதாக நேற்று யாருக்கும் தொற்று இல்லை.