ஜாலான் புசார் நகர மன்ற அலுவல கத்திற்குப் பக்கத்தில் உள்ள கேலாங் பாரு புளோக் 70ஏ 2வது மாடி நடன அரங்கு ஒன்றில் நேற்று காலை 6.35 மணிக்கு தீப் பிடித்தது. உயிருடற்சேதம் இல்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
ஜாலான் புசார் நகர மன்றமும் பாதிப்படையவில்லை. சுமார் 1 மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்டது. 11 அவசரகால வாகனங்களும்
40 தீயணைப்பாளர்களும் பணியில் இறங்கினர். வெடிப்புச் சத்தமும் கண்ணாடி உடையும் சத்தமும் கேட்டதாகவும் குடியிருப்பாளர்கள் பயந்து எழுந்துவிட்டதாகவும் சாவ் பாவ் நாளிதழ் தெரிவித்தது. படம்: குடிமைத் தற்காப்புப் படை/ஃபேஸ்புக்