சிசில் ஸ்த்ரீட், கிராஸ் ஸ்த்ரீட் சந்திப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் ஒரு காரும் லாரியும் மோதிக் கொண்டதில் ஐவர் காயமடைந்தனர்.
காருடன் மோதிய வேகத்தில் லாரியின் பின்புறத்தில் இருந்த இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள் சாலையில் விழுந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
காருடன் மோதிய பின்னர் லாரி ஓட்டுநர் அதைப் பின்னால் செலுத்தியதாகவும் சாலையில் விழுந்த ஊழியர்களில் ஒருவர் மீது லாரியை ஏற்றியதாகவும் சம்பவத்தைத் பார்த்த 55 வயது ஆடவர் ஷின் மின் செய்தித்தாளிடம் கூறினார்.
காயமடைந்த ஊழியர் வலியில் துடித்து அலறினார் என்றும் நினைவிருந்தபோதும் அவரால் பேச முடியவில்லை என்றும் அந்த ஆடவர் தெரிவித்தார்.
காரில் இருந்த ஓட்டுநரும், உடன் இருந்த பயணியும் அதிர்ச்சியில் இருந்தது போல காணப்பட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் வரும் வரை அவர்கள் காரை விட்டு வெளியேறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். விபத்து நடந்த இடத்துக்கு நான்கு ஆம்புலன்சுகள் சென்றதைச் காணொளிகள் காட்டின.
அச்சம்பவம் பற்றி மாலை 5.44 மணிக்குத் தகவல் கிடைத்ததாக போலிசார் கூறினர். 28 வயது, 34 வயதுள்ள இரண்டு ஆடவர்கள், காரை ஓட்டிய 58 வயது மாது, அதில் இருந்த 60 வயது பயணி ஆகியோர் சிங்கப்பூர் பொது மருத்துவ மனைக்குச் கொண்டு செல்லப்பட்டனர். போலிஸ் விசாரணை தொடர்கிறது.