உள்ளூரில் நேற்று பிற்பகல் நிலவரப்படி புதிதாக 347 பேருக்கு கொரோனா கிருமி தொற்றியிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புள்ள தொற்றுச் சம்பவங்கள், எவ்விதத் தொடர்பும் இல்லாத தொற்றுச் சம்பவங்கள் பற்றிய விவரங்களை சுகாதார அமைச்சு தெரிவிக்கவில்லை.
புதிதாகக் கிருமி தொற்றியவர்களில் மூவர் 70 வயதைத் தாண்டிய முதியவர்கள். அவர்களுக்கு தடுப்பூசி இன்னமும் போடப்படவில்லை அல்லது ஒரு தடுப்பூசி மட்டும் போடப்பட்டிருப்பதாக அமைச்சு கூறியது. இவர்களுக்கு கடும் நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அது குறிப்பிட்டது.
இவர்களைத் தவிர வெளிநாட்டிலிருந்து வந்த இரண்டு பேருக்கும் கிருமித்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள் தனிமையில் தங்க வைக்கப்பட்டிருந்தபோது அல்லது இல்லத் தனிமை உத்தரவில் இருந்தபோது நோய் தொற்றியதாக அமைச்சு கூறியது.
வெளிநாட்டிலிருந்து வந்த இவர்களையும் சேர்த்து சிங்கப்பூரில் நேற்று 349 பேருக்கு புதிதாக கிருமி தொற்றியுள்ளது.
சிங்கப்பூரில் கிருமி தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 69,582 ஆக உள்ளது.