சிங்கப்பூரில் வீட்டிலேயே குண மடையும் செயல்திட்டம், அதிகமாகி வரும் கொவிட்-19 நோயாளி களைக் கையாளும் அளவுக்கு முற்றிலும் ஆயத்தமாக இல்லை என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எனினும் தொற்று கூடுவதைக் கருத்தில்கொண்டு அதைச் சமாளிக்க தேவையான திட்டங்களை நாடு தீட்டி இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
திட்டமிடுதல், ஆற்றல், மனித வளம் ஆகியவற்றில் எப்போதுமே நாம் இரண்டடி முதலிடத்தில் இருக்கிறோம் என்ற திரு ஓங், இருந்தாலும் வீட்டிலிருந்தே குணமடையும் செயல்திட்டம் எதிர்பார்த்தபடி இல்லை என்பதை தான் முற்றிலும் ஏற்றுக்கொள்வதாகக் கூறினார்.
அத்திட்டம் 21 நோயாளிகளுடன் பாதி பரிசோதனையில் இருந்ததது. அப்போது கொவிட்-19 தொற்று அதிகரித்து சுகாதார பராமரிப்பு முறைக்கு சுமை கூடியது. அதனால் திட்டத்தை உடனடியாக விரிவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது என்று அமைச்சர் விளக்கினார்.
தங்களுடைய தனிப்பட்ட சூழ்நிலை பற்றி ஆலோசனை பெறு வதற்கு சுகாதார அமைச்சுடன் தொடர்புகொள்ள முடியவில்லை; அடுத்ததாக எதைச் செய்வது என் பதும் புரியவில்லை என பலரும் புகார் தெரிவித்திருந்தனர்.
வீட்டிலேயே குணமடையும் திட்டத்தில் இப்போது ஏறத்தாழ 9,800 பேர் இருக்கிறார்கள். 2,800க்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய 10 நாள் வீட்டில் குணமடையும் ஏற்பாட்டை பூர்த்தி செய்துள்ளனர். அன்றாடம் புதிதாக கிருமித்தொற்றுக்கு ஆளாவோரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வீட்டிலேயே குண மடையும் திட்டத்தில் வைக்கப்படுகிறார்கள். இந்த விகிதாச்சாரம் வரும் வாரங்களில் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு வீட்டிலேயே குணமடையும் ஏற்பாடு இயல்பானதாக இருக்கிறது.
கொவிட்-19 நோயாளிகளில் 98 விழுக்காட்டினருக்கு லேசான அறிகுறிகள் அல்லது அறவே அறிகுறிகள் இல்லை. அவர்களுக்குச் சிறப்புப் பராமரிப்பு எதுவும் தேவைப் படவும் இல்லை என்பதே இதற்கான காரணம் என்றார் அமைச்சர்.
பாட்டாளிக் கட்சி உறுப்பினருக்குப் பதிலளித்து பேசிய அமைச்சர், கிருமித்தொற்று கூடுவதைக் கருத்தில்கொண்டு அதற்கேற்ற திட்டங்களை அரசாங்கம் வகுக்கவில்லை என்று பொருள்பட கருத்துரைப்பது உண்மையல்ல என்றார். அரசாங்கம் பொதுச் சுகாதார வல்லுநர் களுடன் அணுக்கமாகச் செயல்பட்டு வருவதை அவர் சுட்டினார்.
சிங்கப்பூரில் நாள் ஒன்றுக்குப் புதிதாக கிருமித்தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை 5,000லிருந்து 10,000 ஆகக்கூடும் என்று அந்த வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
கிருமியோடுதான் வாழவேண்டி இருக்கும் என்று திட்டமிட்டு அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டுப்பாடுகளைத் தளர்த்தும்போது தொற்றுக் கூடும் என்று திரும்பத் திரும்ப அரசாங்கம் வலியுறுத்தி வந்திருப்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று மொத்தம் 15 உறுப்பினர்கள் கொவிட்-19 தொடர்பான கேள்விகளை எழுப்பினார்கள். அவர்களில் பலரும் வீட்டிலேயே குணமடையும் செயல்திட்டத்தைப் பற்றியும் அது எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்தும் கேட்டனர்.
மேலும் செய்திகள் பக்கம் 4ல்