கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டோர் நவம்பர் 15ஆம் தேதி முதல் சிங்கப்பூருக்கும் தென்கொரியாவுக்கும் இடையே பயணம் செய்யலாம்.
ஜெர்மனியுடன் தென்கொரியாவுக்கும் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூர்வாசிகள், தனிமை உத்தரவு இன்றி சுற்றுலாப் பயணங்கள் செல்லலாம்.
புதிதாக தடுப்பூசி போட்டோருக்கான பயணப் பாதை ஒன்றை சிங்கப்பூர் தென்கொரியாவுடன் திறக்கும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.
இந்தப் புதியப் பாதைக்காக தனது ஆறு பயணங்களையும் மாற்றும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.