தொற்று இல்லையெனில் பள்ளிக்குத் திரும்பலாம் தடைக்காப்பு உத்தரவின் கீழ் உள்ள மாணவர், ஊழியர்க்கு அனுமதி

தடைக்­காப்பு ஆணை­யின்கீழ் இருக்­கும் மாண­வர்­களும் ஊழி­யர்­களும் முதல் நாள் செய்த ஆன்­டி­ஜென் விரைவு சோதனை­யில் (ART) கிரு­மித்­தொற்று இல்லை என உறு­தி­யா­னால் பள்­ளிக்­குத் திரும்­ப­லாம். இந்­தப் புதிய நடை­முறை இன்று முதல் நடப்­புக்கு வரு­கிறது.

புதிய நடை­மு­றை­யின்­கீழ், தடைக்காப்பு ஆணை, விடுப்பு அல்­லது முன் அனுமதி அடிப்படையில் விடுப்பு ஆகி­யவை தொடக்­கப் பள்ளி, உயர்­நி­லைப் பள்ளி, உயர் கல்வி நிலை­யங்­க­ளுக்கு இனிமேல் பொருந்­தாது.

கல்வி அமைச்­சும் சிங்­கப்­பூர் தேர்­வு­ மதிப்­பீட்­டுக் கழ­க­மும் புதுப்­பிக்­கப்­பட்ட தேசிய கொவிட்-19, தனி­மைப்­படுத்­தல் நடை­மு­றை­களை நேற்று வெளி­யிட்­டன.

கிரு­மித்­தொற்றை நிர்­வ­கிக்­கும் செயல்­மு­றையை எளி­தாக்கும் முயற்­சி­யின் ஒரு பகு­தி­யாக, சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்­கும் அவர்­களு­டன் நெருக்­க­மான தொடர்­பில் இருந்­த­வர்­க­ளுக்­கும் நெறிப்­ப­டுத்­தப்­பட்ட விதி­மு­றை­களை நேற்று முன்­தி­னம் அறி­வித்­தார். அதைத் தொடர்ந்து பள்­ளி­களுக்­கான நெறி­மு­றை­களும் புதிப்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

தொடக்­கப் பள்­ளி­கள், உயர்­நி­லைப் பள்­ளி­கள், தொடக்­கக் கல்­லூ­ரி­கள், மில்லியனியா கல்­விக்­க­ழ­கம் ஆகி­ய­வற்­றுக்கு விடுப்பு அல்­லது முன் அனுமதி அடிப்படையில் விடுப்பு போன்றவற்றை இனி­மேல் கல்வி அமைச்சு அளிக்­காது.

இன்று முதல், கிரு­மித்தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­வ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் உள்ள மாண­வர்­க­ளுக்கு ஏழு நாள் சுகாதார அபாய எச்சரிக்கை பிறப்பிக்­கப்­படும்.

அந்த உத்­த­ர­வில் உள்­ள­ மாணவர்கள், ஏழு நாட்களும் பள்ளி செல்வதற்கு முன்பு பரிசோதனை மேற்கொண்டால் போதும்.

இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட அன்று, தம்­மைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­வ­து­டன், ஏஆர்டி சுயபரி­சோ­தனை செய்து­கொள்ள வேண்­டும் என்று கல்வி அமைச்­சின் இணை­யத் தளம் கூறி­யது.

சோத­னை­யில் கிரு­மித்­தொற்று இல்­லை­யென உறு­தி­யா­னால், அவர்­கள் வழக்­க­மான நட­வ­டிக்­கை­க­ளைத் தொட­ர­லாம். எனி­னும், அடுத்­த­டுத்த நாட்­களில் கிரு­மிப் பரி­சோ­த­னையை அவர்­கள் தொடர வேண்­டும்.

தேசிய நெறி­மு­றை­க­ளின்­படி, தொற்று இருப்­பது உறு­தி­செய்­யப்­பட்­ட­வர்­கள் அல்­லது வீட்­டில் தங்­கி­யி­ருக்­கும் உத்­த­ர­வைப் பெற்­ற­வர்­கள், தடைக்­காப்பு உத்­த­ரவு அல்­லது வீட்­டில் தங்­கி­யி­ருக்­கும் உத்­த­ர­வுக் காலம் முடி­யும் வரை பள்­ளிக்­குத் திரும்ப அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்­கள்.

சுகா­தார அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­ட­வர்­கள் இன்று முதல் தங்­கள் தேசிய ஆண்டு இறு­தித் தேர்­வு­களை எழுத அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள் என்று கல்வி அமைச்­சும் சிங்­கப்­பூர் தேர்­வு­கள், மதிப்­பீட்­டுக் கழ­க­மும் வெளி­யிட்ட அறிக்கை கூறி­யது.

புதிய நெறி­மு­றை­க­ளின்படி, இந்த மாண­வர்­கள் தேர்வு நடை­பெ­றும் இடத்­திற்­குச் செல்­ல­வும் திரும்பி வர­வும் பொதுப் போக்­கு­வ­ரத்­தைப் பயன்­ப­டுத்த அனு­ம­திக்­கப்­ப­டு­வர். எனி­னும், தேர்வு எழு­தும் விருப்­பத்தை தங்­கள் பள்­ளி­களுக்­குத் தெரி­விக்க வேண்­டும்.

மேலும், சுகா­தார அமைச்­சின் தேர்வு நெறி­முறைத் தேவை­க­ளைப் பூர்த்தி செய்ய வேண்­டும் என்று அந்த அறிக்கை குறிப்­பிட்­டது.

இதன்­படி, சுகா­தார ஆபத்து எச்­ச­ரிக்கை உத்­த­ரவு விடுக்­கப்­பட்ட முதல் நாளில் அவர்­கள் கிரு­மிப் பரி­சோ­தனை செய்து தொற்று இல்லை என்­பதை உறு­திப்­ப­டுத்த வேண்­டும்.

பள்­ளிக்­குச் சென்­ற­தும், அவர்­கள் தங்­கள் ஏஆர்டி கரு­வி­யின் புகைப்­படத்தை எதிர்­மறை சோதனை முடி­வு­களு­டன் தேர்­வுக் கண்­கா­ணிப்­பா­ளர்­களி­டம் காட்ட வேண்­டும். தங்­கள் அடை­யாள அட்­டையை 'ஏஆர்டி' சோத­னைக் கருவி அரு­கில் வைத்து படம் எடுக்க வேண்­டும்.

அத்­து­டன், சுகா­தார அபாய எச்­ச­ரிக்கை உத்­த­ர­வில் இருப்­ப­வர்­க­ளுக்­கான தேர்வு எழு­தும் இடங்­களில் கடு­மை­யான பாது­காப்பு மேலாண்மை நட­வ­டிக்­கை­கள் இருக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதில், வேறு இடங்­களில் அமர்­வது, மூன்று மீட்­டர் இடை­வெளி கடைப்­பிடிக்­கப்­ப­டு­வது, எழுத்­துத் தேர்­வு­க­ளுக்­கான தேர்வு பாணி இருக்கை முத­லி­யவை அடங்­கும்.

இதற்­கி­டை­யில், மருத்­துவ விடுப்­பில் உள்­ள­வர்­கள் முழு­மை­யாகக் குண­மடைந்து­விட்­டால் தேசிய நிலை­யி­லான ஆண்டு இறு­தித் தேர்­வு­க­ளுக்கு அனு­மதிக்­கப்­படு­வார்­கள்.

எனி­னும், பிசி­ஆர் பரி­சோ­த­னைக்கு பரிந்­து­ரைக்­கப்­பட்ட மாண­வர், சோதனை முடிவு தெரி­ய­வ­ரும்­வரை தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்கொள்ள வேண்­டும்.

கிரு­மித்­தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­களும் வீட்­டில் தங்­கி­யி­ருக்­கும் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட­வர்­களும் தேர்வு எழுத அனு­ம­திக்­கப்­பட மாட்­டார்­கள்.

இறு­திச் சடங்­குக்கோ அல்­லது கடு­மை­யாக நோய்­வாய்ப்­பட்­ட­வ­ரைப் பார்க்­கவோ வெளி­நாடு சென்று திரும்­பி­ய­வர்­கள் சிறப்பு ஏற்­பாட்­டின்­கீழ் தேர்வு எழுத அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

கொவிட்-19 தொடர்­பான கார­ணங்­கள் உட்­பட, தகுந்த கார­ணங்­க­ளுக்­காக தேர்­வைத் தவ­ற­விட்­ட­வர்­கள், சிறப்­புப் பரி­சீ­ல­னைக்கு விண்­ணப்­பிக்­க­லாம்.

அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய, பள்ளிகள் பள்ளி நாள் தொடங்கும்போது உடல் வெப்பநிலை சோதனை, கண்காணிப்பு, பரிசோதனை குறித்த கேள்விகள் போன்றவற்றை மேற்கொள்ளும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!