தீபாவளி நெருங்குவதை முன்னிட்டு, லிட்டில் இந்தியாவில் கூட்ட நெரிசலைத் தடுக்கும்விதமாக மேம்பட்ட பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் ஏற்கெனவே தெரிவித்து இருந்தனர்.
சிராங்கூன் சாலை - கேம்பல் லேன் சந்திப்பில் பாதசாரிகள் சாலையைக் கடக்குமிடம், இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 29) முதல் நாளை மறுதினம் (அக்டோபர் 31) வரை மாலை 6 மணியில் இருந்து இரவு 1 மணிவரையிலும் தீபாவளிக்கு முந்திய நாளில் (நவம்பர் 3) மாலை 6 மணியில் இருந்து இரவு 2 மணிவரையிலும் மூடப்படும் என்று சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் தெரிவித்து இருந்தது.

“சுங்கை சாலையிலும் டன்லப் ஸ்திரீட்டிலும் உள்ள மற்ற இரு சாலையைக் கடக்குமிடங்களுக்கு மக்கள் திருப்பிவிடப்படுவர். உச்ச வேளைகளில் லிட்டில் இந்தியாவின் முக்கியப் பகுதிகளில் நெரிசல் ஏற்படாமல் தடுப்பதை இது உறுதிப்படுத்தும்,” என்று கழகம் கூறி இருந்தது.
தீபாவளி நெருங்க நெருங்க லிட்டில் இந்தியாவில் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் வெவ்வேறு நேரங்களில் பொருள் வாங்க வசதியாக சில கடைகள் தங்கள் வர்த்தக நேரத்தை நீட்டிப்பதாகத் தெரிவித்துள்ளன.
