13,000 மாணவர்கள் பயன்பெற ஆதரவு

சிர­மத்­தில் உள்ள மாண­வர்­கள் பள்­ளிப்­ப­டிப்­பைத் தொட­ரு­வ­தில் உதவ கல்வி அமைச்சு முன்­னோ­டித் திட்­டம் ஒன்றை வகுத்­துள்­ளது. பள்­ளிக்­குப் பிந்­திய ஆத­ரவு மற்­றும் மாற்­றி­ய­மைக்­கப்­ப­டக்­

கூ­டிய விடு­மு­றைத் திட்­டங்­கள் போன்­றவை இதற்­குக் கைகொ­டுக்­கும்.

அடுத்த சில ஆண்­டு­களில் இத்­த­கைய ஆத­ரவு சுமார் 100 தொடக்­கப் பள்ளிகள், மேல்­நி­லைப் பள்­ளி­க­ளுக்கு விரி­வு­ப­டுத்­தப்­பட உள்­ளது. இவ்­வாறு விரி­வாக்­கம் செய்­வ­தன் மூலம் கிட்­டத்­தட்ட 13,000 மாண­வர்­கள் பயன­டை­வார்­கள் என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­துள்­ளார்.

மாண­வர்­கள் தங்­க­ளது தொடக்­கப் பரு­வத்­தில் சந்­திக்­கும் ஏற்­றத்­தாழ்­வைக் குறைக்­கும் நோக்­கில் செயல்­ப­டுத்­தப்­படும் பல்­வேறு திட்­டங்­க­ளின் ஒரு பகு­தி­யாக இந்த விரி­வாக்­கம் அமை­வ­தா­க­வும் அவர் சொன்­னார்.

'மேம்­ப­டுத்­தப்­பட்ட பள்ளி வளங்­கள் அதி­க­ரிப்­புத் திட்­டம்' என்று அறி­யப்­படும் இது 2019ஆம் ஆண்டு முதல் 23 பள்­ளி­களில் முன்­னோ­டித் திட்­ட­மாக நடை­

மு­றைப்படுத்­தப்­பட்­டது.

அதன்மூலம் ஆண்­டு­தோ­றும் 2,000க்கும் மேற்­பட்ட மாண­வர்­கள் தங்­க­ளது படிப்­பை­யும் வரு­கை­யை­யும் தொடர ஆத­ரவு பெற்று வரு­கின்­ற­னர்.

இனி ஒவ்­வொரு பள்­ளி­யி­லும் கூடு­த­லாக நான்கு முதல் ஐந்து ஆசி­ரி­யர்­கள் வரை இத்­திட்­டத்­தில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள் என்­றும் அடுத்த ஆண்டு மேலும் 24 பள்­ளி­க­ளுக்கு ஆத­ரவு நீட்­டிக்­கப்­ப­டும்­போது இந்த நடைமுறை செயல்­ப­டுத்­தப்­படும் என்­றும் கல்வி அமைச்சு நேற்று கூறி­யது.

2020 ஜனவரி முதல் சிங்கப் பூரின் நான்கு வட்டாரங்களில் 300க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாண வர்களுக்குப் பயனளிக்கும் சமூக மேம்பாடு முன்னோடித் திட்டமும் புதிய மாற்றம் பெற உள்ளது.

கல்­வி­யா­ளர்­க­ளை­யும் சமூ­கப் பங்­கா­ளி­க­ளை­யும் பாராட்­டும் மெய்­நி­கர் நிகழ்வு ஒன்­றில் பங்­கேற்­றுப் பேசிய திரு லீ, முன்­னோ­டித் திட்­டத்­தின் பலன் ஊக்கு விப்­பாக அமைந்­துள்­ளது என்­றும் மாண­வர்­க­ளின் வரு­கை­யில் முன்­னேற்­றம் காணப்பட்டுள்ளது என்­றும் கூறி­னார்.

"அதி­க­மான தொடக்­கப் பள்ளி மாண­வர்­கள் அவர்­க­ளது பள்­ளிக்­கூ­டத்­தின் மாண­வர் பரா­ம­ரிப்பு நிலை­யத்­தில் சேர்ந்­துள்­ள­னர்.

"அதே­நே­ரம், முன்­னோ­டித் திட்­டத்­தில் இடம்­பெற்­றுள்ள உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­களும் தங்­க­ளது பள்­ளித்­தோ­ழர்­க­ளு­டன் இணைந்து பாடங்­க­ளைச் சிறப்­பா­கச் செய்­கி­றார்­கள்," என்று பிர­த­மர் குறிப்­பிட்­டார்.

"சுதந்­தி­ரம் அடைந்­தது முதல் மக்­க­ளின் முன்­னேற்­றத்­தைத் திறம்­ப­டச் செய்து வரும் சிங்­கப்­பூர், வச­தி­கு­றை­வான சூழ­லில் வள­ரும் பரு­வத்­தில் உள்ள குழந்­தை­க­ளின் முன்­னேற்­றத்­திற்­குச் செய்­யப்­பட வேண்­டியவை நிறைய உள்­ளன. இது ஒரு முற்­றுப்­

பெ­றாத பணி.

"வச­தி­யுள்­ள­வர்­கள், வசதி குறை­வா­ன­வர்­கள் என்­பது எல்­லாத் தலை­மு­றை­யி­லும் உள்­ளது. ஒவ்­வொரு தலை­மு­றை­யி­ன­ரி­டத்­தி­லும் காணப்­படும் வறுமை, வச தி­ கு­றைவு போன்­ற­வற்றை ஒழிப்­

ப­தில் சிங்­கப்­பூர் தொடர்ந்து உறு­தி­யாக உள்­ளது," என்­றார் திரு லீ.

வசதிகுறைந்த மாணவர்களுக்கான திட்டம் விரிவடைகிறது

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!